இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இலங்கை மாதாவின் மூச்சுவிடும் முதன்மை உறுப்பாக விளங்குகின்ற மன்னார் தீபகத்தில் பொன்னார் மேனியுடன் இந்நாள் வரை திகழ்ந்து சோதனைகள் பல வென்று சாதனைகள் மிக படைத்து புகழ்பூத்து புத்தொளியும் புதுப்பொலிவும் இறை இயேசுவின் ஆசிரும் அருளும் பெற்று புனித சவேரியார் அருள் வரம் அடைந்து திருக்குடும்ப அருட்சகோதரிகளின் வழிநடத்தலால் கல்வி என்னும் பொன்பூர் சொரியும் கற்பகமாய் மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரி தனது அறுபத்தென்பதாவது புதுப்பொலிவுடன் மகிழ்ச்சியும் கொண்டு வீறுநடை போடுகின்றது.
மன்னார் மண்ணில் தனக்கான ஒரு தனித்துவத்தினை கொண்டு தலைநிமிர்ந்து மிளிந்துகொண்டிருக்கும் எமது கல்லூரியின் மனித நேய விழுமியங்கனை நெறிப்படுத்திய அறிவுச் செயலூக்கத்தை திருக்குடும்ப அருட்சகோதரிகளின் தெய்வீக ஆன்மீகப் பணியும் கல்விப்பணியும் மெய்ப்பிக்கின்றன என்றால் அது மிகையாகாது.